Saturday, August 13, 2022

சித்த வித்தை :-பகுதி-13 நெற்றிக்கண் / சுழிமுனை பார்வை

 சித்த வித்தை :-பகுதி-13 நெற்றிக்கண் / சுழிமுனை பார்வை

”தன்னில் இருக்கின்றதும் அதோகதியாகி வெளியே பொய்க்கொண்டிருக்கும் ஜீவனை(சுவாசத்தை), அப்படி வெளியே போய் அழிய விடாமல் , தன்னுள்ளே எப்போதும் மேலும் கீழும் நடத்தி , தன்னில் இருக்கின்ற சுழுமுனை வழியே பிரம்மமந்திரத்தை  தட்டித் திறந்து , அதில் ஜீவனை அடக்கி ஆள்வதற்காக, வேண்டி கற்றுக்கொள்வதே சித்த வித்தை ஆகும் ”


வித்தை:- உங்கள் பார்வை திருஷ்டியில் (ஞானக்கண்களில்) எந்த ஒரு உயிரின் அல்லது பொருட்களின் சூட்சுமங்களை எளிதில் தெரிந்துகொள்ளும் சக்தி.

ஒருவரை பார்க்கும்போதே அவரின் மனதை தெரிந்துகொள்ளும் சக்தி, ஒரு ஜடப்பொருளை பார்க்கும்போதே அந்த பொருளின் தன்மையை புரிந்துகொள்ளும் சக்தி, ஒரு இடத்தை / நிலத்தை பார்க்கும்போதே அந்த இடத்தின் அருமை பெருமையை கூறும் சக்தி (உதாரணம்:- இடத்தை பார்த்தவுடன் இங்கு நிறைய தண்ணீர் உள்ளது கிணறு வெட்டுங்கள் என்று கூறும் சக்தி)

சித்த வித்தை பழகிவிட்டால், நாம் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் மந்திரமாக செயல்பட்டுவிடும். விதியை மதி வென்றுவிடும் நிஜத்தையும், கண்கூடாகப்பார்க்கலாம். (நினைத்தது நிறைவேறும்)

அகத்தியர் சித்தரின் பாடல்:-

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

அகத்தியரின் பாடலை நேரடியாக படிக்கும்போது ஒரு அர்த்தமும் அதன் மறுபக்கத்தை உணர்ந்து தெளிவடையும்போது பாடலுக்கு வேறுஒரு அர்த்தமும் முழுமையாக விளங்கும்.

நேரடியான பொருள்:- மனதை செம்மையாக்கிக்கொண்டாள் மந்திரம் தேவையில்லை என்பது..
ஆகவே மந்திர உபதேசம் தேவையில்லை மந்திரங்களை கூறவேண்டிய அவசியமில்லை என்பதாக தவறான பொருள் போதித்துவிடும்..

நமது மனம் எதை நோக்கினாலும் அதன் மறுபக்கத்தை உணர்ந்து தெளிவடையவேண்டும் என்பதே சித்தரின் நோக்கம், குறிக்கோள்... மேற்குறிப்பிட்ட அகத்தியரின் பாடலிலும் மந்திரம் சொல்லி சொல்லி அது நமது நாடி நரம்புகளில் ஊறி செம்மையானபின்பு, திரும்ப அந்த ஆரம்ப நிலை மந்திரம், சொல்லத்தேவையில்லை அது தானாகவே அனிச்சையாக விஸ்வரூபமாக உயர்ந்து வளர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்... என்பதாக பொருள் கொள்ளவேண்டும்.

உதாரணம்:- ஒன்றாம் வகுப்பில் அ, ஆ. இ, ஈ... என்பதை மனதளவில் சொல்லிப்பழகிவிட்டால் 10ம் வகுப்பில் படிக்கும்போது அ, ஆ. இ, ஈ...என்று சொல்ல தேவையிருப்பதில்லை அது தானாகவே வளர்ந்து உயர்ந்து தனது விசுவரூப நிலையை எட்டிப்பிடித்திருக்கும்...  ஆகவே சிறப்பான எந்த ஒரு சிந்தனையும், செயலும் நமது (அடிமனதில் ) நாடி நரம்புகளில் கலந்துவிட்டால் திரும்ப அவற்றைபற்றி நினைக்க தேவையில்லை அது தானாகவே தனது விசுவரூப நிலையை எட்டிப்பிடிக்கும்.

நாம் இதுவரை தெரிந்துகொண்ட அனைத்து பாட வகுப்புகளும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. அந்த அந்த பாடங்களை நீங்கள் சிறப்பாக உங்களின் உள்மனதால் உணர்ந்திருந்தால், தற்போது உங்களுக்கே தெரியாமல் உங்களின் ஆற்றல், மிகப்பெரிய விஸ்வரூப நிலையாக வளர்ந்துகொண்டிருக்கும் நிலையை உங்களால் உணரமுடியும்.. ஆகவே முதல் நிலையில் கற்ற பாடங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த தேவையிருக்காது...

நன்றி மீண்டும் அடுத்த பாடத்தில் வேறு ஒரு புதிய நிலையை எட்டிப்பிடிக்கலாம்.
நன்றிகளுடன் கோகி ரேடியோமார்க்கோணி புது தில்லியிலிருந்து 

துறவிகளை அலட்சியம் செய்யக்கூடாது

 📚📚📚📚📚📚📚📚📚

📚துறவிகளை அலட்சியம் செய்யக்கூடாது📚

உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். சாப்பாடு கிடையாது; ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி... இல்லையேல், பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி, அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர், இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும்போது, அவரை வணங்கி உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார். இந்த உத்தமருக்கு உணவளிக்காமல்,  நான் உண்பதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தார் அந்தப் பெண்மணி.

ஒருநாள்... அந்த வீட்டுக்கு, உணவிற்காக துறவி சென்றபோது, பெண்மணி வீட்டில் இல்லை; ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார். பெண்மணியின் கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். துறவியைப் பார்த்தார்; துறவியின் கோலமும், தோற்றமும் அந்த மனிதருக்கு, அலட்சியத்தையும், சினத்தையும் உண்டாக்கின. ஆதலால், அவர் தன் கையில் இருந்த பிரம்பை ஓங்கி, ’போ, போ... இங்க நிக்காதே... போ...’ என்று திட்டி, விரட்டி விட்டார். துறவியும் வாய் திறவாமல், நகர்ந்து விட்டார். இது நடந்து நீண்டநேரம் கடந்து, பெண்மணி வீடு திரும்பினார். துறவி வந்ததோ, அவரைத் தன் கணவர் அவமானப்படுத்தித் துரத்தியதோ, பெண்மணிக்குத் தெரியாது. அவர், ’என்ன ஆச்சு இன்னிக்கி... அந்த மகான் உணவுக்கு இன்னும் வரலியே...’ என்று கவலையில் ஆழ்ந்தார். அலுவலகம் சென்ற, அந்தப் பெண்மணியின் கணவர் எழுதத் துவங்கினார்; ஊஹூம், எழுத முடியவில்லை. சில வினாடிகளில் கை முழுதுமாக உணர்ச்சியற்று, செயலற்றுப் போய் விட்டது. மருத்துவரிடம் ஓடினர்; பலனில்லை. அதனால், அவரை வீட்டிற்கு கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினர் நண்பர்கள்.

பதறித் துடித்தார் மனைவி, ’ஏன் இப்படி நடந்தது...’ எனக் குழம்பினார். அந்த நேரத்தில் அவர் கணவர், ’இன்று, ஒரு பரதேசி வீட்டிற்கு வந்தார். பிரம்பை ஓங்கி, கண்டபடி திட்டி, அவரை விரட்டினேன். ஒருவேளை, அதனால், இப்படி ஆகியிருக்குமோ...’ என்றார், மனைவியிடம். பெண்மணிக்கு உண்மை புரிந்தது. ’ஆகா! வந்தது, நம் மரியாதைக்கு உரிய துறவி தான். நம் கணவர் அவமானப்படுத்தியது அவரைத்தான்...’ என்பதை உணர்ந்தார். உடனே, கணவரை ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு, துறவியைத் தேடிப் போனார். துறவி, ஒரு இடத்தில், உட்கார்ந்து, கைகளால் தாளம் போட்டபடி, பாடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், பெண்மணி, வண்டியிலிருந்து இறங்கி, துறவியின் திருவடிகளில் விழுந்தார்; துறவியின் முன், கணவரை நிறுத்தி, மன்னிக்கும்படி வேண்டி அழுதார். அவர் கணவரின் பாதிக்கப்பட்ட கையை, கருணையோடு பார்த்த துறவி, ’ஜா ஜா...’ என்று சொல்லி, பழையபடி பாடலை முணுமுணுத்து தாளம் போடத் துவங்கினார்.

அதே வினாடியில், செயலற்று இருந்த கை செயல்படத் துவங்கியது. கணவரின்  கை_செயல்படத் துவங்கியதைக் கண்ட பெண்மணி, ஆனந்தக்கண்ணீர் சிந்த, கணவரோடு சேர்ந்து, துறவியின் திருவடிகளில் மீண்டும் விழுந்து வணங்கினார். அந்தத் துறவி, விட்டோபாசுவாமிகள். இந்நிகழ்ச்சி நடந்த இடம், திருவண்ணாமலையில் இருந்து வேலுார் செல்லும் வழியில் உள்ள போளூர் என்னும் ஊர். ஸ்ரீவிட்டோபா சுவாமிகளின் சமாதி, இன்றும் அங்கே உள்ளது. யாரையும் இழிவாகப் பேசி, அவமானப் படுத்தாமல் இருந்தால், தெய்வத் திருவருள் தானே வந்து பொருந்தும் என்பதை விளக்கும் வரலாறு ..
📚📚📚📚📚📚📚📚📚

பகுதி-12 ஸ்தூல மற்றும் சூட்சும

 சித்தர்கள் கூறிய சித்தவித்தை

💐பகுதி-12💐

🔔மஹாபாரத சகுனி   உருட்டும் தாயக்கட்டை, அவரின் மனது சொல்லுக்கு கட்டுப்பட்டது போல.. நம்மாலும் அந்த மாய வித்தையை செய்யமுடியுமா?

🔔15 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை தொடாமல், அசைப்பது அல்லது தள்ளிவிடுவது சாத்தியமா?

💐சித்தவித்தை, சித்தர் வாக்கு...🙏

பொதுவாக எந்த ஒரு உயிருள்ள அல்லது உயிரற்ற உருவங்களுக்கு (பொருட்களுக்கு) ஸ்தூல மற்றும் சூட்சும என்ற இரண்டு  உருவம்(உடல்) உண்டு

இதில் "சூட்சும உருவம்" என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம், போன்ற செயலால் ஆக்கப்பட்ட கண்ணுக்கு புலப்படாத ஆற்றல்..

"ஸ்தூல" உருவம்/உடல்/சரீரம்.. என்பது, கண்ணுக்கு புலப்படக்கூடிய உயிருள்ள அல்லது உயிரற்ற உருவம்/ பொருள்..

ஸ்தூல உருவத்தை அடிப்படையாக கொண்டு சூட்சும உருவம் அமைந்திருக்கிறது..

சூட்சும உருவத்தை/உடலை மாற்றி அமைக்கும் சக்தி ஸ்தூல உடம்புக்கு உண்டு.. அதுவும் முறையான பயிற்சி மற்றும் சாதகம் செய்தால் மட்டுமே சூட்சும உருவத்தை கட்டுப்படுத்த முடியும்.

நமது சூட்சும-மனம் மற்றும் ஸ்தூல சித்தம் (உடல்) உரிய பயிற்சியினால் மட்டும் வசப்படாது, அதை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல புத்தி வலுவாக இருக்க வேண்டும்..

இந்த சூட்சுமம் மற்றும் ஸ்தூலம் இவற்றை இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும் சக்திதான்.. "பிராணன்"(உயிர்).

ஆகவே எந்த ஒரு ஸ்தூல-(உடல்/பொருள்) உறுவத்திற்கும் அதன் சூட்சுமத்தை உணர்ந்து செயல்படுத்த, பிராணன்(உயிர்) அவசியமாகிறது...

ஸ்தூல ஜடப்பொருளான தாயக்கட்டைக்கு, அந்த பொருளின் சூட்சுமத்திற்கு ஏற்றவாறு தனது பிராணத்தை(உயிர்  சக்தியை) தந்தால் அந்த ஜடப்பொருள் உயிர்பெற்று, உயிரைத்தந்த நமது மனம் சொல்லும் பேச்சை அப்படியே கேட்கும் நிலை ஏற்படுவதையே.. சகுனி உருட்டி தாயக்கட்டைகள் அவர் நினைத்ததை செய்தது..

அறிவுக்கு தெரிந்த விவரத்தை செயல்படுத்த உரிய பயிற்சியும், தொடர் சாதகமும் முக்கியம்..

சித்த வித்தையில் முறையான பயிற்சி பெற்றவர்களால் 15 அடி தூரத்தில் நிற்கும் ஒருவரை அல்லது ஒரு பொருளை, நமது கை படாமல் தள்ளிவிட முடியும்..

எந்த ஒரு ஜடப்பொருளுக்கும், பிராணன் என்கிற உயிர்சக்தி கொடுத்தல் அது தானே நகரும்..

கூடு விட்டு கூடு பாய்வதும் இந்த தத்துவத்திலே..👍

மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம், நன்றி, இப்படிக்கு கோகி. ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.

📚📚📚📚📚📚📚📚📚

சித்த வித்தை மனசெல்லாம் கவலை, சோகம், உடல் உபாதை, வேதனை..


📚📚📚📚📚📚📚📚📚
🌎சித்த வித்தை🌎

❌பிரச்சனை:-
😔மனசெல்லாம் கவலை, சோகம், உடல் உபாதை, வேதனை..

✅சித்தர் வாக்கு:- உள் உப்பை குறைத்து வெளி உப்பை அதிகமாக்கு...

✅தீர்வுக்கான வழி:-
41-நாட்கள்.. சாப்பாட்டில் உப்பை சற்று குறைத்து,  நீங்கள் தூங்கும் அறையில்  தலைக்கு மேலே ஒரு தட்டு நிறைய கல் உப்பை நிரப்பி வையுங்கள்.. 41 நாட்களுக்கு பிறகு அந்த உப்பை மரங்களின் அடிப்பகுதியில் போட்டுவிடுங்கள்

10-நாட்களிலேயே  மனசும் உடலும் புத்துணர்ச்சியை பெற்று. உங்களின் செயல்திறன் அதிகரிப்பதை காணலாம்...
(குறிப்பு:- படுக்கையறையில் உங்கள் கைத்தொலைபேசியை எப்போதும் தலைப்பக்கம் வைக்காமல் கால்பக்கம் வையுங்கள்...)
📚📚📚📚📚📚📚📚📚

📚📚📚📚📚📚📚📚📚
🌎பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது..!

பிரபஞ்சமானது , மக்கள், சம்பவங்கள் , சின்னங்கள் ,  சகுனங்கள், கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறது. 

சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள். 

நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி
சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை
தடுத்துக்கொள்கிறோம்!

பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான். 

இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும் கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. 

நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது,

நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின்
நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது ! 

நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, சுக துக்கங்களுக்குநம் எண்ணங்களே காரணம் !

"தீதும் நன்றும் பிறர் தர வார"

"வாழ்க வளமுடன்"

📚📚📚📚📚📚📚📚📚