Meditation தியானம்
Lesson-7, பாடம்-7
பயிற்சியில் இதுவரை:-
1.சங்கல்பம், 2.ஆசனம், 3.முத்திரை, 4.தியானம், 5.மணி, மந்திரம், தியானம், 6. பிரணவமும் பிராணமும்
இன்றைய பயிற்சியில்
சுழிமுனை சுவாச விழிப்புணர்வு
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்
சுவாசத்தை பற்றிய தெளிவு வேண்டும்
நம் வாழ்வில் நம்மையறியாமலேயே நாம் செய்யும் ஒரு முக்கியமான விஷயம் சுவாசம்.
எதையெல்லாமோ உற்று உற்றுப் பார்த்து மனதில் வேண்டாத ஆசைகளையும், தீய எண்ணங்களையும் வளர்த்து துன்பத்திற்கு ஆளாகும் நாம், நாம் உயிர்வாழ ஆதாரமான சுவாசத்தை கவனிப்பதும் இல்லை, அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. " காற்றே கடவுள் "
அனைவரும் மறைத்து வைத்த சூட்சுமத்தை திறக்கின்றோம்.நமது இந்த உடலுக்குள்ளே எண்ணற்ற ரகசியங்களை இறைவன் புதைத்து வைத்துள்ளான். அது என்ன அவற்றை முழுமையாக தெரிந்துகொள்ளவே இந்தப்பிறவி போதாது..
சித்தர்களின் குறிப்பிலிருந்து தெரிந்துகொண்ட விவரங்களை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்...
நாம் ஒரு நாழிகைக்கு சராசரியாக 360 சுவாசம் , ஒரு நாளைக்கு 21,600 சுவாசம் மேற்கொள்வதாக கணக்கிடலாம்.
மூச்சுப் பயிற்சியில் "பூரகம் " என்பது மூச்சை உள்ளே இழுப்பது, " கும்பகம் " என்பது உள்வாங்கிய மூச்சை (காற்று) உள்ளே நிறுத்துவது, " ரேசகம்" என்பது மூச்சை வெளியிடுவது. நமக்கு எந்த நாசியில் சுவாசம் ஒடுகின்றதோ அதற்கு "பூரணம் " என்று பெயர்.
" சீதாக்காயம் " என்று கோரக்கர் சித்தர் கூறியிருக்கிறார். சீதாக்காயம் என்பது நமது நாசி (மூக்கு ) தான். நாசிக்குமேல் காசி என்று கூறுவார்கள். அது என்னவென்றால் "சுழிமுனை" என்பது ஆகும்.
உடலைச் கீங்காரித்தாய் !
உயிர்க்கு என்ன செய்தாய் ?
மேற்சொன்னவைகளை கருத்தில் கொண்டு நமக்கு பழக்கமாகிவிட்ட மூச்சு பயிற்சியையும், தியானத்தையும் செய்யும் முறையை கீழே கண்ட ஆடியோவில் கூறியிருக்கிறேன்...
சுவாசம் பற்றி உணர்ந்த நாம், அதை சரியாக பின்பற்றுவதில்லை.
அடுத்த பயிற்சி வகுப்பிலிருந்து சுவாசத்தை பற்றிய தெளிவு மற்றும் மூச்சின் பல சூட்சுமங்களில்.. சில அனுபவங்களை பயிற்சியில் பெறலாம்.
பிரபஞ்ச சக்திக்கு நன்றி, வாய்ப்புக்கு நன்றி..
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்... உபயோகமான பயிற்சிகளில் மேலும் பயணிப்போம். நன்றி
No comments:
Post a Comment