Meditation தியானம்
Lesson-1, பாடம்-1
ஊழ் வினை உருக்கி.. உள் ஒளி பெருக்குவதே யோகம்
சங்கல்பம்/நோக்கம்
சங்கல்பம் என்பது உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது.. இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது. சங்கல்பம் என்பது நமது குறிக்கோளை சொல்வது மற்றும் அதற்கான உறுதிமொழி எடுத்தல் ஆகிய இரண்டுமே சங்கல்பம் செய்வதன் பொருளாக அமைகிறது. நமது குறிக்கோளை வரையறுத்து மனதையும் ஆயத்தப்படுத்திக் கொள்வதுதான் சங்கல்பம்.
இன்று, இங்கு இந்த பயிற்சியை எதற்க்காக செய்கிறோம், என்கிற நோக்கம் மற்றும் எண்ணங்களை நமது ஆழ் மனதில் விதைத்து அதற்கான செயல்களில் ஈடுபடுவது.
இன்றய நல்ல நாளில் நமது எண்ணங்களின் தேவைகள் அனைத்தும் கிடைக்கப்பெற்று. வளமான வாழ்க்கை கிடைக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டு இந்த பயிற்சியை தொடங்குவோம்.
பிரபஞ்ச சக்திக்கு நன்றி, வாய்ப்புக்கு நன்றி..
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
பயிற்சி உதவி:- கோகி, ரேடியோ மார்க்கோனி, புது தில்லி.
மீண்டும் அடுத்த பயிற்சி வகுப்பில் சந்திக்கலாம்...நன்றி
No comments:
Post a Comment